அம்மாவைப் பற்றி கவிதை எழுத ஆசைப்பட்டேன்... ஆரம்பித்துவிட்டேன்... இன்னும் ஆரம்பத்திலேயே
நிற்கிறேன். 'அம்மா' என்றதும் அலை, அலையாய் எண்ணங்கள் முதலில்... காலை வருடிச்
சென்ற அலைகள், விரைவில்... கழுத்தளவு உயர்ந்தன அம்மா என்றால் ஆழ்கடல் என்று அப்போது
புரிந்தது.
ஆழ்கடலைக் கவிதையாக்க முயல்வது கத்துக்குட்டியின் கனவு. கவிதையைக்
கைவிட்டேன் ஆழ்கடலில் நீந்தப் புறப்பட்டேன் அவ்வப்போது கடலில் மூழ்கி அற்புத
முத்தெடுக்க முயற்சி செய்கிறேன்
கடல் பற்றி கவிதை எதற்கு? கடல் அனுபவம் போதும்
எனக்கு.