பிலிப்பீன்சில் நிருபர் கொலை செய்யப்பட்டிருப்பதற்கு ஆயர்கள் கண்டனம்
மே 11,2012. பிலிப்பீன்சின் Davao மாநிலத்தில் திருஅவை நடத்தும் வானொலியின் நிருபர் கொலை
செய்யப்பட்டிருப்பதற்குத் தங்களது வன்மையாகக் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர் அந்நாட்டு
ஆயர்கள். Nestor Libaton என்பவர், இச்செவ்வாயன்று ஒரு நிகழ்ச்சி பற்றிய விபரங்களை
வழங்கிய பின்னர், Mati நகருக்கு இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது இனம்
தெரியாத மூன்று துப்பாக்கி மனிதரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பிலிப்பீன்சில் கடந்த
15 நாள்களில் கொல்லப்பட்ட மூன்றாவது நிருபர் Nestor Libaton என்பவர் குறிப்பிடத்தக்கது.