2012-05-09 15:36:59

கர்தினால் ஃபிலோனி - விசுவாச ஆண்டில் பாப்பிறை மறைபரப்புக் கழகங்களின் பணி இன்னும் அதிகமாகத் தீவிரப்படுத்தப்பட வேண்டும்


மே,09,2012. நற்செய்திப்பணி திருஅவையின் இதயத்துடிப்பாக விளங்குகிறது, அப்பணியில் முழு மூச்சுடன் ஈடுபட வருகிற விசுவாச ஆண்டு நம்மை அழைக்கிறது என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
மேமாதம் 7ம் தேதி இத்திங்கள் முதல் வருகிற சனிக்கிழமை வரை உரோம் நகரில் நடைபெறும் பாப்பிறை மறைபரப்புக் கழகங்களின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய திருப்பீட நற்செய்திப் பணி பேராயத்தின் தலைவர் கர்தினால் Fernando Filoni இவ்வாறு கூறினார்.
மற்ற ஆண்டுகளை விட, வருகிற விசுவாச ஆண்டில் பாப்பிறை மறைபரப்புக் கழகங்களின் பணி இன்னும் அதிகமாகத் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறிய கர்தினால் Filoni, நற்செய்திப் பணிக்குப் பெரும் சவாலாக இருப்பது சீனா என்பதையும் தன் உரையில் சுட்டிக் காட்டினார்.
பல நாடுகளிலிருந்து இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் வருகிற சனிக்கிழமையன்று திருத்தந்தையைச் சந்திப்பதுடன் இக்கூட்டம் நிறைவடையும்.







All the contents on this site are copyrighted ©.