2012-05-08 15:03:44

போர்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் 150 கோடிக்கு மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர் – ஐ.நா.


மே 08,2012. கடந்த 20க்கு மேற்பட்ட ஆண்டுகளில் உலகில் வன்முறை மிகுந்த கலவரங்கள் குறைந்திருந்தாலும், போர்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் 150 கோடிக்கு மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
வாஷிங்டனிலுள்ள, யுக்திகள் மற்றும் சர்வதேச ஆய்வுக்கான நிறுவனத்தில் இவ்வாறு உரையாற்றிய பான் கி மூன், அமைதியைக் கட்டி எழுப்பும் முயற்சி சிக்கலானது, இதற்கு வளர்ச்சியுடன்கூடிய ஒத்துழைப்பு அவசியம் என்று குறிப்பிட்டார்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு தன்னால் இயன்ற அனைத்தையும் ஐ.நா.செய்து வருகின்றது என்றும் கூறிய அவர், ஐ.நா.வின் 16 அமைதிகாக்கும் படைகள் 15 நாடுகளில் பணியாற்றுகின்றன என்பதையும் குறிப்பிட்டார்.








All the contents on this site are copyrighted ©.