மே 08,2012. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜரில் சுமார் மூன்றில் ஒரு பகுதிக் குழந்தைகள் ஊட்டச்சத்துக்
குறையுள்ளவர்கள் மற்றும் ஏழு குழந்தைக்கு ஒன்று வீதம் 5 வயதை எட்டு முன்பே இறக்கின்றன
என்று Save the Children என்ற பிறரன்பு அமைப்பு கூறியது.
நலவாழ்வு, கல்வி, பொருளாதாரம்,
ஊட்டச்சத்து உட்பட பல கூறுகளின் அடிப்படையில் 165 நாடுகளில் ஆய்வு நடத்திய Save the Children
அமைப்பு, உலகில் தாயாக இருப்பதற்கு மிக மோசமான இடம் நைஜர் என்று அந்த ஆய்வு தெரிவிப்பதாகக்
குறிப்பிட்டுள்ளது. மேற்கு ஆப்ரிக்காவில் கடும் உணவு நெருக்கடியை எதிர்நோக்கும் நைஜர்,
ஆப்கானிஸ்தானைவிட மோசமான நிலையைக் கொண்டிருப்பதாகவும் கூறியது Save the Children அமைப்பு.