தினமும் ஏறக்குறைய ஆயிரம் பெண்கள் குழந்தை பிறப்பின் போது இறக்கின்றனர் – ஐ.நா
மே 05,2012. மருத்துவச்சியர் எனப்படும் பேறுகாலத்தில் மருத்துவ உதவி செய்யும் பெண்கள்
எக்காலத்தையும்விட இக்காலத்திற்கு அதிகம் தேவைப்படுகின்றனர் என்று ICM என்ற அனைத்துலக
மருத்துவச்சியர் கூட்டமைப்பு கூறியது. மே5, இச்சனிக்கிழமை அனைத்துலக மருத்துவச்சியர்
தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி இவ்வாறு அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்நாளை முன்னிட்டுப்
பேசியுள்ள UNFPA என்ற ஐ.நா.மக்கள்தொகை நிதியமைப்பு, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை
வசதியில்லாத இலட்சக்கணக்கானப் பெண்கள் நல்ல முறையில் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கு இவர்கள்
செய்து வரும் உதவிகளைப் பாராட்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய ஆயிரம் பெண்கள்
குழந்தை பிறப்பின் போது இறக்கின்றனர். 20 இலட்சம் குழந்தைகள் பிறந்த 24 மணி நேரத்தில்
இறந்து விடுகின்றன என்று UNFPA அறிவி்த்தது.