கென்யாவில் தேர்தல் குறித்த கல்வியை வளர்க்க ஆயர்கள் நடவடிக்கை
மே 05,2012. ஆப்ரிக்க நாடான கென்யாவில் 2013ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெறவிருக்கும்
பொதுத் தேர்தல்கள் கலவரங்களின்றி இடம் பெறுவதற்கு உதவுவதற்குத் திட்டமிட்டு வருகின்றனர்
ஆயர்கள். நல்ல தலைவர்களின் பண்புகளை விளக்கும் தேர்தல் கையேடு ஒன்றைத் தயாரிப்பதற்குத்
திட்டமிட்டு வரும் கென்ய ஆயர்கள், நாட்டின் நலனைத் தங்கள் இதயத்தில் கொணடிருக்கும் தலைவர்களை
மட்டும் தேர்ந்தெடுக்குமாறு மக்களைத் தூண்டவிருப்பதாகக் கூறினர். கென்யாவில் 2010ம்
ஆண்டில் மாற்றி அமைக்கப்பட்ட புதிய அரசியல் அமைப்பின்படி முதன்முதலாக இந்த 2013ம் ஆண்டுத்
தேர்தல் நடைபெறவிருக்கின்றது. 2007ம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இடம்
பெற்ற வன்முறையில் 1,220 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது