2012-05-05 14:51:00

அல்பேனிய அரசுத் தலைவர், திருத்தந்தை சந்திப்பு


மே 05,2012. அல்பேனிய அரசுத் தலைவர் Bamir Topiஐ இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் 20 நிமிடங்கள் தனியே சந்தித்துப் பேசினார் திருத்தந்தை.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் அல்பேனிய அரசுத் தலைவர் Topi.
அல்பேனியாவுக்கும் திருஅவைக்கும் இடையே நிலவும் உறவு, குறிப்பாக, பல்சமய உரையாடல், அந்நாட்டின் கல்வி மற்றும் சமூக வாழ்வுக்குக் கத்தோலிக்கத் திருஅவை செய்து வரும் பணிகள், ஐரோப்பிய சமுதாய அவையில் அல்பேனியா இணைவது ஆகியவை இச்சந்திப்புக்களின்போது பேசப்பட்டன என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.







All the contents on this site are copyrighted ©.