Suu Kyiபாராளுமன்றத்தில் கலந்து கொண்டது குறித்து மியான்மார் ஆயர்கள்
பாராட்டு
மே,03,2012. எதிர்கட்சித் தலைவர் Aung San Suu Kyi இப்புதனன்று உறுதிமொழி எடுத்து மியான்மார்
பாராளுமன்றத்தில் கலந்து கொண்டது நாட்டுக்கு நல்லதொரு எதிர்காலம் உருவாவதன் ஓர் அடையாளம்
என்று மியான்மார் ஆயர்கள் கூறியுள்ளனர். மியான்மார் பாராளுமன்றத்தில் சொல்லப்படும்
உறுதிமொழியில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறி போராடி வந்த Suu Kyi, தன் கருத்துவேறுபாடுகளை
ஒதுக்கிவைத்து, பாராளுமன்றத்தில் இணைந்தது நாட்டுக்கு நல்லது என்று மியான்மார் ஆயர் பேரவையின்
நீதி அமைதி பணிக்குழுவின் தலைவர் ஆயர் Raymond Saw Po Ray, Fides செய்தி நிறுவனத்திற்கு
அளித்த பேட்டியொன்றில் கூறினார். நாட்டுக்குப் புதியதோர் எதிர்காலம் என்ற தொனியில்
பேசுவதற்குமுன், தற்போது தங்கள் நாடு எதிர்கொண்டுள்ள பல பிரச்சனைகளைத் தீர்க்கவேண்டும்
என்றும் ஆயர் Po Ray சுட்டிக்காட்டினார். மியான்மாரில் கத்தோலிக்கத் திருஅவை சிறுபான்மை
நிலையில் இருந்தாலும், நாட்டின் அனைத்து முன்னேற்ற முயற்சிகளிலும் முழுமூச்சுடன் இணைந்து
உழைக்கும் என்ற உறுதியையும் ஆயர் Po Ray வெளிப்படுத்தினார்.