2012-05-03 14:45:53

Mayfeeliings குறும்படங்கள்


மே,03,2012. தொடர்புத்துறை நுட்பத்தில் உலகம் பல வழிகளிலும் வளர்ந்துள்ள போதிலும், நம்மிடையே தனிமையில் வாடும் மக்களின் எண்ணிக்கையும் ஏன் வளர்ந்து வருகிறது என்ற கேள்வியை எழுப்பும் ஒரு குறும்படம் அண்மையில் வெளியானது.
மரியன்னையின் மாதம் என்று அழைக்கப்படும் மேமாதத்தில் 2008ம் ஆண்டு முதல் ஒவ்வொரு மேமாதமும் குறும்படங்களை தயாரித்து வரும் இளம் இஸ்பானிய திரைப்படத் தயாரிப்பாளர் Santiago Requejo தனது ஐந்தாவது குறும்படத்தை மேமாதம் முதல் தேதியன்று வெளியிட்டார்
நான் ஏன் செபமாலை சொல்கிறேன், அருளாளர் இரண்டாம் ஜான்பால் மீது இளையோர் கொண்டுள்ள மதிப்பு ஆகிய எண்ணங்களை மையப்படுத்தி Requejo கடந்த ஆண்டுகளில் குறும்படங்களை வெளியிட்டார். இவ்வாண்டு அவர் வெளியிட்டுள்ள குறும்படத்தின் மையப் பொருள் செபம்.
Mayfeeliings என்ற பெயரில் அவர் வெளியிடும் இக்குறும்படங்களைக் காணவும், அவர் உருவாக்கியிருக்கும் செப இணையதளத்தில் சேரவும் mayfeelings.com என்ற வலைதளத்தை அணுகலாம் என்று ICN கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.