2012-05-02 15:27:03

மரியன்னையின் மாதத்தில் சீனாவில் உள்ள மரியன்னை திருத்தலங்களுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது


மே,02,2012. மே மாதம் 9ம் தேதி, வருகிற புதனன்று Lang Shan என்ற மரியன்னைத் திருத்தலத்தின் திருநாள் கொண்டாடப்படுவதையொட்டி, அத்திருத்தலத்தை நோக்கி ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு செல்வதாக Hai Men மறைமாவட்டத்தின் ஆயர் Joseph Shen Bin, Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
மரியன்னையின் மாதம் என்று அழைக்கப்படும் மே மாதத்தில் சீனாவில் உள்ள மரியன்னை திருத்தலங்களுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது என்று Fides செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
மேமாதம் 24ம் தேதியன்று சீனத் திருஅவைக்காக சிறப்பான செபங்களை அகில உலகத் திருஅவை எழுப்பவேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அழைப்பு விடுத்துள்ளத்தான் எதிரொலியாக மக்கள் மரியன்னைத் திருத்தலங்களை நாடிச் செல்கின்றனர் என்றும் Fides செய்தி நிறுவனம் மேலும் கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.