2012-05-02 15:25:46

இந்திய கத்தோலிக்க நலவாழ்வுக் கழகம் (CHAI) துவக்கியிருக்கும் நலக் காப்பீட்டுத் திட்டம்


மே,02,2012. மருத்துவ வசதிகளுக்கு ஆகும் செலவு அதிகரித்து வரும் இந்நாட்களில் இந்திய கத்தோலிக்க நலவாழ்வுக் கழகம் துவக்கியிருக்கும் நலக் காப்பீட்டுத் திட்டம் மக்களுக்குப் பெரும் பயனை விளைவிக்கும் என்று டில்லிப் பேராயர் Vincent Concessao கூறினார்.
CHAI என்று அழைக்கப்படும் இந்திய கத்தோலிக்க நலவாழ்வுக் கழகம், இந்தியத் திருஅவையால் நடத்தப்படும் அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நலக் காப்பீட்டுத் திட்டத்தை இச்செவ்வாயன்று அறிமுகப்படுத்திய விழாவில் தலைமையேற்று பேசிய டில்லிப் பேராயர் Concessao, இவ்வாறு கூறினார்.
நலக் காப்பீட்டுத் திட்டத்துடன் சூரிய ஒளியால் சக்தி பெறும் வழிகளையும் CHAI அமைப்பு அறிமுகப்படுத்தியது. 'நலவாழ்வும் பசுமையும்' என்ற கருத்தில் இவ்விரு திட்டங்களும் இச்செவ்வாயன்று CHAI தலைமையகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.
1943ம் ஆண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அருள்சகோதரி Mary Glowrey என்ற மருத்துவர் உருவாக்கிய CHAI அமைப்பு, அரசு சாரா அமைப்புக்களில் உலகிலேயே மிகப் பெரியதோர் அமைப்பாக விளங்குகிறது என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.