2012-05-01 15:08:51

இந்தியக் காரித்தாஸ் அமைப்பின் புதிய தலைவரும் பொறுப்பாளர்களும் பதவியேற்பு


மே,01,2012. இந்தியாவில் நிலவும் பட்டினி வெளி அடையாளம் என்றும், மக்களுக்கு உணவு சென்றடைய வழி செய்யாமல் இருப்பது சமுதாயக் குற்றம் என்றும் டில்லி உயர் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் Victor D’Souza கூறினார்.
இத்திங்களன்று நடைபெற்ற இந்தியக் காரித்தாஸ் அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டத்தின் துவக்கத்தில் நடைபெற்ற திருப்பலியில் மறையுரையாற்றிய அருள்தந்தை Victor D’Souza இவ்வாறு கூறினார்.
இந்தியக் காரித்தாஸ் அமைப்பின் தலைவராகப் பணியாற்றி வந்த ஆயர் Peter Remigius தலைமையேற்று நடத்திய இத்திருப்பலியில் காரித்தாஸ் அமைப்புடன் தொடர்பு கொண்ட ஆயர்களும், குருக்களும் கலந்து கொண்டனர்.
இவ்வமைப்பின் புதியத் தலைவராக ஆயர் Lumen Monteiroவும், புதியப் பொறுப்பாளர்களாக அருள்தந்தையர் Frederick D’Souzaவும் Paul Moonjelyயும் பதவியேற்றனர்.
பணிக்காலம் முடிந்து பதவி விலகும் ஆயர் Peter Remigiusம் அருள்தந்தை Varghese Mattamanaவும் பொன்னாடை, நினைவுப் பரிசுகளுடன் வழியனுப்பி வைக்கப்பட்டனர்.







All the contents on this site are copyrighted ©.