2012-04-30 15:33:47

பார்வை இழந்தோரை மையப்படுத்தி வத்திக்கானில் நடைபெறும் கருத்தரங்கு


ஏப்ரல்,30,2012. மே மாதம் 4, 5 தேதிகளில் பார்வை இழந்தோரை மையப்படுத்தி வத்திக்கானில் கருத்தரங்கு ஒன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நலமளிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோர் திருப்பீட அவையும், பார்வை இழந்தோர் கிறிஸ்தவ பணி அமைப்பும் இணைந்து நடத்தும் இக்கருத்தரங்கில் இறையியலாளர்கள், விவிலிய ஆய்வாளர்கள், சமுதாய ஆர்வலர்கள், கல்வித் துறை அறிஞர்கள் என்று பலரும் கலந்து கொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் நோயால் துன்புறும் ஏழைகளுக்கு நிதி உதவி செய்வதற்காக 2004 ம் ஆண்டு அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களால் உருவாக்கப்பட்ட 'நல்ல சமாரியன்' என்ற அறக்கட்டளையின் உதவியுடன் இக்கருத்தரங்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவிலியத்திலும், திருஅவை வரலாற்றிலும் பார்வை இழந்தோருக்கு ஆற்றப்பட்டுள்ள பணிகள் குறித்து இக்கருத்தரங்கில் பேசப்படும் என்றும், தற்போதைய மருத்துவ உலகில் பாவை இழப்பைத் தடுப்பது, பார்வை இழப்பை குணமாக்குவது போன்ற கருத்துக்கள் விவாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.