ஏப்ரல்,30,2012. தென் ஆப்ரிக்காவில் தேர்தல் தினத்தையொட்டி 35 ஆயிரம் கைதிகள் விடுதலை
செய்யப்பட்டுள்ளனர். வெள்ளையர்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட தென் ஆப்ரிக்காவில்
கடந்த 1994ம் ஆண்டு தேர்தல் நடந்து, அந்த தேர்தலில் நெல்சன் மண்டேலா போட்டியிட்டு அதிபராக
பதவியேற்ற தினத்தை கொண்டாடும் விதமாக அந்நாட்டில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
இந்தச் சிறப்பு தினத்தைக் கொண்டாடும் விதமாக, பல்வேறு சிறைகளில் சிறு குற்றங்களுக்காக
அடைக்கப்பட்டிருந்த 35 ஆயிரம் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.