கசடதபற என்ற வலைதளத்தில், சாவண்ணா Magendran என்பவர் எழுதிய கவிதை...
யார்
தலைவன்? பிரபலம் ஆக பிழைப்பவனா, பிறர் பலம் ஆக உழைப்பவனா? யார் தலைவன்? மக்கள்
வெளிச்சத்தில் நிற்பவனா? மக்களை வெளிச்சத்தில் நிறுத்துபவனா? யார் தலைவன்? இனம்
காக்க கம்பு தூக்குபவனா? பணம் காக்க சொம்பு தூக்குபவனா? யார் தலைவன்? ஊர் காக்க
சாதித்துக் காட்டுபவனா ? ஊழல் காக்க சாதியைக் காட்டுபவனா? யார் தலைவன்? கோடிக்கோடியாய்
கள்ளப்பணம் சேர்ப்பவனா? தெருத்தெருவாய் நல்ல மனம் சேர்ப்பவனா. யார் தலைவன்? புலியையும்
புழுவாய் வளைப்பவனா? புழுவையும் புலியாய் வளர்ப்பவனா? யார் தலைவன்? கொடுமைகள்
கண்டும் பொத்திக்கொண்டு இருப்பவனா? கத்திக்கொண்டாவது இருப்பவனா?