உலகில் அதிகமான சிறார் தொழிலாளரைக் கொண்டுள்ள நாடு இந்தியா
ஏப்ரல்28,2012. உலகில் அதிகமான சிறார் தொழிலாளரைக் கொண்டுள்ள நாடு இந்தியா என்று உலக
தொழில் நிறுவனம் அறிவித்திருப்பதாக ஃபீதெஸ் செய்தி நிறுவனம் கூறியது. இந்தியாவில்
5க்கும் 14 வயதுக்கும் உட்பட்ட ஒரு கோடியே 26 இலட்சம் சிறார் தொழிலாளர் உள்ளனர் என்றும்,
இவர்களில் 20 விழுக்காட்டினர் வீட்டு வேலை செய்கின்றனர் மற்றும் அதிகம் துன்புறுத்தப்படுகிறார்கள்
என்றும் உலக தொழில் நிறுவனம் கூறியது. எனினும், இவ்வெண்ணிக்கை 4 கோடியே 50 இலட்சம்
என மற்ற நிறுவனங்கள் கூறுகின்றன.