ஹொண்டுராஸ் கர்தினால் : உலகளாவியப் பொருளாதார நெருக்கடி நற்செய்தி அறிவிப்பின்
அவசியத்தை வலியுறுத்துகிறது
ஏப்ரல்,27,2012: பொருளாதார மற்றும் அரசியல் துறைகளில் இருப்பவர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதற்கான
முயற்சிகள் புதுப்பிக்கப்பட வேண்டுமென்று ஹொண்டுராஸ் நாட்டுக் கர்தினால் Oscar Rodríguez
Maradiaga அழைப்பு விடுத்தார். நிதித்துறையிலும் அரசியலிலும் அறநெறி விழுமியங்கள்
குறைவதே எல்லா மட்டங்களிலும் ஊழல் மலிந்து கிடப்பதற்கு காரணம் என்றுரைத்த கர்தினால் Rodríguez
Maradiaga, பொருளாதார நெருக்கடி நிறைந்த இக்காலத்தில் ஏழைகளுக்கான உதவிகளைப் பல அரசுகள்
இரத்து செய்துள்ளன என்று கூறினார். இஸ்பெயின் நாட்டு Santanderல் நடந்த திருஅவையின்
41வது சமூக வாரத்தில் இவ்வாறு பேசிய ஹொண்டுராஸ் நாட்டுக் கர்தினால் Rodríguez Maradiaga,
எந்நிலையிலும் ஏழைகளுக்கான உதவிகள் இரத்து செய்யப்படக் கூடாது என்பதையும் வலியுறுத்தினார். திருஅவை
சமூகத்தளத்தில் அதிகம் ஈடுபட்டுள்ளதால் நற்செய்தியின் வல்லமை இல்லாமல் போய்விட்டது என்ற
நம்பிக்கை நிலவுகிறது, ஆனால் உண்மையில் நிதித்துறையிலும் அரசியலிலும் நன்னெறி விழுமியங்கள்
இல்லாததால் எல்லா மட்டங்களிலும் ஊழல் மலிந்து கிடக்கின்றது என்று கூறினார் கர்தினால்.