கர்நாடக மாநில ஆளுனர்: இந்தியத் திருஅவை நம்பிக்கையின் அடையாளம்
ஏப்ரல்,27,2012: கல்வி, நலவாழ்வு மற்றும் பிற வளர்ச்சித் திட்டங்கள் மூலம் இந்தியாவைக்
கட்டி எழுப்புவதற்கு கிறிஸ்தவர்கள் மிகப்பெரிய அளவில் உதவியுள்ளார்கள் என்று கர்நாடக
மாநில ஆளுனர் H R Bharathwaj கூறினார். பெங்களூருவில் இப்புதன் முதல் நடைபெற்று வரும்
இந்திய தேசிய கிறிஸ்தவ சபைகள் அவையின் 4 நாள் மாநாட்டில் உரையாற்றிய ஆளுனர் பரத்வாஜ்,
சமய சார்பற்ற நாடாகிய இந்தியாவின் அரசியல் அமைப்பில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன
என்று பேசினார். எனவே வழிபாட்டுத்தலங்களைச் சேதப்படுத்துவது இந்தியாவின் அரசியல் அமைப்பை
புண்படுத்துவதாகும் என்றும், ஏழைகள் மற்றும் தேவையில் இருப்போருக்கு திருஅவை நம்பிக்கையின்
அடையாளமாக இருக்கின்றது என்றும் கூறினார் பரத்வாஜ். NCCI எனப்படும் இந்திய தேசிய கிறிஸ்தவ
சபைகள் அவை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தகைய மாநாட்டை நடத்துகின்றது. இந்த அவையில்
30 கிறிஸ்தவ சபைகளும் சுமார் ஒரு கோடியே 30 இலட்சம் கிறிஸ்தவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.