2012-04-25 14:47:55

பேச்சு சுதந்திரம் மதிக்கப்படுவதற்கு ஐ.நா.பொதுச் செயலர் வேண்டுகோள்


ஏப்ரல்25,2012. பேச்சு சுதந்திரம், மிக முக்கியமான மனித உரிமைகளில் ஒன்று என அனைத்துல பத்திரிகை சுதந்திர நாளுக்கென வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.
மே மாதம் 3ம் தேதி கடைப்பிடிக்கப்படும் இவ்வுலக நாளின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்டுள்ள பான் கி மூன், பேச்சு சுதந்திரம், மற்ற சுதந்திரங்களைத் தாங்கிப் பிடிப்பதாகவும், மனித மாண்புக்கு அடித்தளமாகவும் அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
உலகின் எல்லா இடங்களிலும் எந்த வகையான ஊடகம் மூலமாகவும் தகவல்களைப் பெறவும், அறிவிக்கவும் கருத்துக்களைத் தெரிவிக்கவும் சர்வதேச மனித உரிமைகள் அறிக்கை அனுமதியளிக்கின்றது என்றும் பான் கி மூன் கூறினார்.
மேலும், 2010க்கும் 2011ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பணியில் இருந்த போது 127 பத்திரிகையாளர் கொல்லப்பட்டனர். கடந்த ஆண்டில் மட்டும் 62 பத்திரிகையாளர் கொல்லப்பட்டனர் என்று யுனெஸ்கோ அறிவித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.