ஏப்ரல் 25,2012. காங்கோ குடியரசில் ஏழ்மையை ஒழிப்பதற்கு ஊழலற்ற அரசும் மக்களின் நலன்நாடும்
நல்ல நிர்வாகமும் அவசியம் என்று அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர். தலைநகர்
Brazzaville ல் 40 வது ஆண்டுக் கூட்டத்தை முடித்து அறிக்கை வெளியிட்ட ஆயர்கள், காங்கோ
குடியரசில் ஏழ்மையை ஒழிக்கும் முறைகள் குறித்த தங்களது தீர்மானங்களை வெளியிட்டுள்ளனர். நாட்டின்
பொது நிர்வாகத்தில் இருக்கும் தலைவர்கள் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குமாறும்,
சமூகத்தின் நலனை மனதிற்கொண்டு நல்ல விழுமியங்கள் காக்கப்படுவதற்காகத் தங்களை அர்ப்பணிக்குமாறும்
கேட்டுள்ளனர் ஆயர்கள். ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த நாடுகளில் இறப்பை எதிர்நோக்கும்
கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை, வளர்ந்த நாடுகளைவிட 45 மடங்கு அதிகம் என்று புள்ளி விபரங்கள்
கூறுகின்றன.