2012-04-24 15:43:57

மதங்களிடையே இடம்பெறும் பேச்சுவார்த்தைகள் உலக அமைதிக்கு உதவ வேண்டும்


ஏப்ரல்,24,2012. உலகில் அமைதியையும், சிறுபான்மையினருக்குரிய மதிப்பையும் வளர்க்கும் நோக்கில் மதங்களிடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெற வேண்டும் என இந்தோனேசியாவில் இடம்பெற்ற பலசமய கருத்தரங்கில் இத்திங்களன்று அழைப்பு விடப்பட்டது.
ஜகார்தாவில் சான் எஜிதியோ குழுவால் ஏற்பாடுச் செய்யப்பட்ட பல்சமய உரையாடல் கருத்தரங்கின் துவக்க விழாவில் பங்கேற்ற இந்தோனேசிய மற்றும் இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இக்கருத்தை வெளியிட்டனர்.
ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளும் தன்மையுடன் கூடிய பாலங்களை கட்டியெழுப்புவதே உலகில் அமைதிக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு வழி வகுக்கும் என்றார் இந்தோனேசிய அமைச்சர் Marty Natalegawa.
இதே கருத்தரங்கில் உரையாற்றிய இத்தாலிய அமைச்சர் ஜூலியோ தெர்சி, சிறுபான்மை சமூகத்தினரின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கு மதங்களிடையே பேச்சுவார்த்தைகள் இருக்கவேண்டும் என்று கூறினார்.
ஜகார்த்தா பேராயர் Ignatius Suharyo, இந்தோனேசிய இஸ்லாமிய அமைப்பு தலைவர் Din Syamsuddin, சான் எஜிதியோ கத்தோலிக்க அமைப்பின் தலைவர் Marco Impagliazzo ஆகியோருடன் மதப்பிரதிநிதிகள் பலரும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.








All the contents on this site are copyrighted ©.