2012-04-23 15:55:36

வறுமையில் வாடும் அனைத்துக் குழந்தைகளுக்கும் உணவு உதவி வேண்டி இங்கிலாந்து கத்தோலிக்க அமைப்புகள் வேண்டுகோள்


ஏப்ரல் 23, 2012. இங்கிலாந்தில் ஏழ்மையில் வாடும் அனைத்து 22 இலட்சம் குழந்தைகளுக்கும் பள்ளிகளில் இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்திற்கு கத்தோலிக்க கல்வி அமைப்பும், காரித்தாஸ் நிறுவனமும் இணைந்து தங்கள் முழு ஆதரவை வழங்கியுள்ளன.
ஏழ்மையில் வாடும் குழந்தைகளுள் பாதிபேரே இதுவரை இலவச மதிய உணவுத்திட்டத்தின் கீழ் பலனடைந்து வருவதாகத் தெரிவித்த இக்கத்தோலிக்க அமைப்புகள், அனைத்துக் குழந்தைகளும் பலன்பெறும் வண்ணம் இத்திட்டம் செயல்படுத்தப்படுமாறு குரல் கொடுத்துள்ளன.
12 இலட்சம் குழந்தைகள் எவ்வித உணவு உதவிகளும் பெறாமல் வாழ்ந்து வருவதாகக் கூறும் இந்த கத்தோலிக்க அமைப்புகள், பள்ளி விடுமுறைக்காலத்தின்போதும் குழந்தைகளுக்கு உணவு உதவிகள் வழங்க வழிவகைச் செய்யப்பட வேண்டும் என அரசை விண்ணப்பித்துள்ளன







All the contents on this site are copyrighted ©.