2012-04-21 14:34:12

திருத்தந்தை : கலை இறைவனுக்குச் செலுத்தும் புகழ்ச்சி


ஏப்.21,2012: அழகின் உன்னதமான இறைவனுக்குச் செலுத்தும் புகழ்ச்சியாக கலை அமைந்துள்ளது என்று கூறினார் திருத்தந்தை.
ஏப்ரல் 16, இத்திங்களன்று 85வது பிறந்த நாளைச் சிறப்பித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைக் கவுரவிக்கும் விதத்தில் இவ்வெள்ளி மாலை வத்திக்கான் பாப்பிறை 6ம் பவுல் அரங்கத்தில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் இவ்வாறு அவர் கூறினார்
உலகின் மிகப் பழமையான மற்றும் உலகப் புகழ் பெற்ற ஜெர்மனியின் Leipzig, Gewandhaus இசைக்குழு நடத்திய இசை மழையின் இறுதியில் சிறிய உரையாற்றிய திருத்தந்தை இக்குழுவினருக்கு, சிறப்பாக இதனை வழிநடத்திய இத்தாலியரான Riccardo Chaillyக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இந்த இசைக் கச்சேரியை நடத்துமாறு 2010ம் ஆண்டில் அழைப்பு பெற்ற போது, இதனை நம்பமுடியாத ஓர் அழைப்பாகவும், இதன் மூலம் தான் மிகவும் கவுரவிக்கப்பட்டதாக உணர்ந்ததாகவும் வத்திக்கான் வானொலியில் கூறினார் இந்தக் கச்சேரியின் நிர்வாக இயக்குனர் Andreas Schulz. இசை பற்றிய ஆழமான அறிவும் பற்றும் கொண்ட திருத்தந்தைக்கு இக்கச்சேரி மிகவும் தனித்துவம் மிக்கது என்றும் Schulz கூறினார்.







All the contents on this site are copyrighted ©.