கியூபா நாட்டுக்கெதிரான பொருளாதாரத் தடைகள் அகற்றப்படுமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்
வலியுறுத்தல்
ஏப்.21,2012: கடந்த ஆண்டில் தளர்த்தப்பட்ட கியூபா நாட்டுக்கெதிரான சில பயணக் கட்டுப்பாடுகள்
நல்ல விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும்வேளை, அந்நாட்டுக்கெதிரானப் பொருளாதாரத் தடைகள் அகற்றப்படுமாறு
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் சர்வதேச நீதி மற்றும் அமைதி ஆணையத் தலைவர் வலியுறுத்தியுள்ளார். கியூபா
நாடு பல முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியது ஒருபுறம் இருந்தாலும், இவ்விரு நாடுகளுக்கிடையே
ஆழமான உரையாடலும் தொடர்புகளும் இருப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்று ஆயர்
Richard E. Pates கூறினார். அமெரிக்க அரசு செயலர் ஹில்லரி கிளின்டனுக்கு அனுப்பிய
கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள ஆயர் Pates, இவ்விரு நாடுகளுக்கிடையே இடம் பெறும்
உறவுகள், கியூபாவில் மனித உரிமைகளும் மற்றும்பிற நல்ல மாற்றங்களும் ஏற்பட உதவும் என்றும்
கூறியுள்ளார். 50 ஆண்டுகளாக அமலில் இருக்கும் கியூபாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள்,
அரசியல் யுக்தியாகவும் அறநெறிக்குப் புறம்பானதாகவும் இருக்கின்றது என்று அமெரிக்க ஐக்கிய
நாட்டு அருட்சகோதரி Ondina Cortes கூறியுள்ளார்.