2012-04-21 14:53:20

கவிதைக் கனவுகள்... உயிர்ப்பின் உருவகம்


உயிர்ப்பின் உருவகம் தேடியபோது, உள்ளத்தில் உருவான வரிகள் இவை...

வீரம் என்றால் என்ன?
விளக்கம் கேட்டான் தம்பி
அகராதியின் பக்கங்களை
அகழ்ந்தான் அண்ணன்
அர்த்தம் சொன்னான்
தம்பிக்குப் புரியவில்லை.

விளக்கம் தேடி வெளியே வந்தனர் இருவரும்
போகும் வழியில்...
எரிந்திருந்தது புல்வெளி
கருகிப்போன தளிர்களின் நடுவில்
தனியொரு புல் மட்டும்
கருகாமல் நின்றது
கண்களைக் கவர்ந்தது
அதுதான் வீரம் என்று
அண்ணன் சொன்னது
தம்பிக்குப் பரிந்தது

தன்னைச் சுற்றி அனைத்துமே
நம்பிக்கையின்றி அழிந்தாலும்
அழிவின் நடுவிலும்
ஆயிரம் கனவுடன்
உயர்ந்து நிற்கும் புல்தான்
உயிர்ப்பின் உருவகம்








All the contents on this site are copyrighted ©.