2012-04-20 15:34:26

விசுவாச ஆண்டு திருத்தந்தையின் ஏழாம் ஆண்டு பரிசு – பேராயர் கோமெஸ்


ஏப்.20,2012. பாப்பிறையாக ஏழு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருஅவைக்கு வழங்கியிருக்கும் சிறந்த பரிசாக, மலரவிருக்கும் விசுவாச ஆண்டு அமைந்துள்ளது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பேராயர் ஒருவர் கூறினார்.
ஏப்ரல் 19 இவ்வியாழனன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பாப்பிறைப் பணியில் ஏழு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையொட்டி CNA செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த Los Angeles பேராயர் Jose H. Gomez, திருத்தந்தை அறிவித்துள்ள விசுவாச ஆண்டு, ஒவ்வொருவரும் தங்களது விசுவாசம் பற்றிச் சிந்திப்பதற்கு ஏற்ற காலம் என்று கூறினார்.
தனது 85வது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ள திருத்தந்தை அனைத்து நிகழ்வுகளிலும் பங்கு கொள்வது பெரிய ஆசீர்வாதம் என்றும், அவருக்காக நாம் செபிக்க வேண்டுமென்றும் Los Angeles பேராயர் Gomez வலியுறுத்தினார்







All the contents on this site are copyrighted ©.