மியான்மாருக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அகற்றுவது குறித்து நாடுகள் மறுபரிசீலனை
ஏப்.20,2012. மியான்மாரில் இராணுவ ஆதிக்கத்துடன் ஆட்சி செய்து வரும் அரசு, தொடர்ந்து
மக்களாட்சிப் பாதையில் சென்றால் அந்நாட்டுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அகற்றுவது குறித்து
மறுபரிசீலனை செய்வதாக அமெரிக்க ஐக்கிய நாடும், ஐரோப்பிய சமுதாய அவையும் தெரிவித்துள்ளன. மியான்மாரின்
Thingyan புத்தாண்டையொட்டி அறிக்கை வெளியிட்ட அமெரிக்க அரசுச் செயலர் ஹில்லரி கிளின்டன்,
புதிய வாய்ப்புக்களுடன் ஒளிமயமான எதிர்காலத்தை கட்டுவதற்கு முயற்சிக்கும் மியான்மாருடன்
அமெரிக்க ஐக்கிய நாடு தொடர்ந்து ஒத்துழைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு காலத்தில்
தனிமைப்படுத்தப்பட்ட நாடு தற்போது மக்களாட்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியின் புதிய பாதையில்
சென்று கொண்டிருக்கிறது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது. ஏப்ரல் 17ம் தேதி செவ்வாயன்று
மியான்மாரில் புத்தாண்டு சிறப்பிக்கப்பட்டது.