2012-04-18 15:16:38

கராச்சியில், ஒரு கத்தோலிக்கப் பள்ளியின் நிலத்தை ஆக்ரமித்த வன்முறை கும்பல்


ஏப்ரல்,18,2012. இத்திங்களன்று, பாகிஸ்தான் கராச்சியில், நிலங்களை அபகரிக்கும் வன்முறை கும்பல் ஒன்று, ஒரு கத்தோலிக்கப் பள்ளியின் நிலத்தை ஆக்ரமிக்க முயன்றதைத் தொடர்ந்து, தலத் திருஅவை அரசின் உதவியை நாடியுள்ளது.
கராச்சியில் பேராயராகப் பணிபுரிந்த கர்தினால் Joseph Cordeiro நினைவாக அங்கு நடத்தப்பட்டு வரும் Cardinal Cordeiro உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் இத்திங்களன்று நுழைந்த 70 பேர் கொண்ட வன்முறை கும்பல், பள்ளிக்குச் சொந்தமான 2000 சதுர மீட்டர் அளவு நிலத்தின் மீது உரிமை கொண்டாடி, பள்ளியின் சுற்றுச் சுவரை இடித்தனர்.
பள்ளியின் நிர்வாகி அருள்தந்தை Pervez Khalidஐயும், வேறு ஆறு பள்ளிப் பணியாளர்களையும் இந்த வன்முறை கும்பல் தாக்கியுள்ளதாக UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
24 ஆண்டுகளுக்கு முன் கராச்சி நகர மேம்பாட்டுத் துறையிடமிருந்து வாங்கப்பட்ட இந்த நிலத்திற்கு உரிமை கொண்டாடும் இந்த கும்பலின் ஆக்கிரமிப்பைக் குறித்து கராச்சி நகர அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.