தமிழர்கள் பிரச்சினையில் தீர்வினை வழங்க பெருபான்மை சிங்கள மக்களுக்குத் தடையில்லை
ஏப்ரல்,16,2012. தமிழர்கள் பிரச்சனையில் தீர்வு வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளுக்குப்
பெரும்பான்மையான சிங்கள மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா
பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை சிங்கள
மக்கள் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் மிகவும் பிழையானவை எனவும், அரசியல்
இலாப நோக்கங்களுக்காக இனப்பிரச்சனையை அரசியல்வாதிகள் தூண்டி விடுவதாகவும், அவர் குற்றம்
சாட்டியுள்ளார். போர் நிறைவடைந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அரசு
வடக்கு மக்களுக்கு போதியளவு சேவைகளை ஆற்றவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ்
மக்கள் அமைதியானவர்கள், அனைத்து தமிழர்களையும் பயங்கரவாதிகளாக கருத முடியாது எனவும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.