2012-04-16 15:55:25

கிரகோரியன் பல்கலைக்கழகப் பேராசியர் அருள்தந்தை Jacob Srampickal அவர்களின் எதிர்பாராத மரணம்


ஏப்ரல்,16,2012. இயேசு சபை அருள்தந்தை Jacob Srampickal அவர்களின் எதிர்பாராத மரணம் இந்தியாவில் தொடர்புத் துறைப் பணிகளுக்கு ஒரு பெரும் இழப்பு என்று இந்திய ஆயர் பேரவையின் சமூகத் தொடர்புப் பணிக்குழுவின் செயலர் அருள்தந்தை George Plathottam, கூறினார்.
உரோம் நகரில் இயேசு சபையினர் நடத்திவரும் கிரகோரியன் பல்கலைக் கழகத்தில் பேராசியராகப் பணிபுரிந்து வந்த அருள்தந்தை Srampickal, இச்சனிக்கிழமையன்று ஆஸ்திரியாவில் உள்ள வியென்னா நகரில் இறையடி சேர்ந்தார்.
வியென்னா நகருக்கு பத்து நாட்களுக்கு முன் சென்றிருந்த அருள்தந்தை Srampickal, அங்கு நோயுற்று மருத்துவமனையில் பத்து நாட்கள் கோமா நிலையில் இருந்தார். இச்சனிக்கிழமை காலையில் இறையடி சேர்ந்தார். அவருக்கு வயது 62.
இந்திய ஆயர் பேரவையின் கண்காணிப்பில் புது டில்லியில் இயஙகிவரும் NISCORT என்ற தொடர்பு சாதனப் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனராக வருகிற ஜூன் மாதம் பொறுப்பேற்கவிருந்த அருள்தந்தை Srampickalன் மறைவு பெரும் இழப்பு என்று கூறினார் அருள்தந்தை Plathottam.
தொடர்பு சாதனத் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள அருள்தந்தை Srampickal, பல நூறு குருக்களையும், துறவியரையும் தொடர்பு சாதனத் துறையில் பயிற்றுவித்தவர் என்றும், பல நூல்களை எழுதியவர் என்றும் கத்தோலிக்க ஊடகங்கள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.