2012-04-16 15:54:42

ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர்களின் உயிர்ப்புப் பெருவிழாச் செய்திகள்


ஏப்ரல்,16,2012. மனிதர்கள் தங்கள் மரண பயத்தை மேற்கொள்வதற்காக உலகப் பொருட்களைத் திரட்டுவதில் கவனம் செலுத்துகின்றனர் என்றும், மரணத்தை வென்ற கிறிஸ்துவே முடிவற்ற வாழ்வின் ஊற்று என்றும் Constantinople ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் முதலாம் Bartholomew கூறினார்.
இஞ்ஞாயிறன்று ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைகள் இயேசுவின் உயிர்ப்பைக் கொண்டாடியபோது, அவர்களுக்கு உயிர்ப்புப் பெருவிழாச் செய்தியை வெளியிட்ட முதுபெரும் தலைவர் Bartholomew இவ்வாறு கூறினார்.
இவ்வுலகச் செல்வங்களையும் வசதிகளையும் வளர்த்துக் கொள்வதால், தங்கள் மரணத்தைத் தவிர்க்க முடியும் என்று நம்பி வரும் உலகில், இந்தப் பேராசையால் மென்மேலும் மரணங்களே பெருகி வருகின்றன என்பதைத் தன் செய்தியில் குறிப்பிட்டார் முதலாம் Bartholomew.
இதற்கிடையே, ஆர்த்தடாக்ஸ் சபைகள் கொண்டாடும் உயிர்ப்புத் திருவிழாவையொட்டி மாஸ்கோ முதுபெரும்தலைவர் Kirill வழங்கிய செய்தியில், உலகப் போக்கிற்கு மாற்று சாட்சிகளாக வாழ கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
ஆர்த்தடாக்ஸ் உயிர்ப்புப் பெருவிழா வழிபாட்டில் இரஷ்யாவின் அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலக இருக்கும் Dmitri Medvedev அவர்களும், வருங்காலத் தலைவர் Vladimir Putin அவர்களும் கலந்து கொண்டனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.








All the contents on this site are copyrighted ©.