2012-04-14 15:32:09

மூளைவளர்ச்சி குன்றிய கரு கலைக்கப்படுவது ஏற்கப்பட்டிருப்பதற்குப் பிரேசில் ஆயர்கள் கண்டனம்


ஏப்.14,2012 : கருவில் வளரும் குழந்தை, மூளையின்றி அல்லது அதன் மூளை சரியாக வளராமல் இருந்தால் அக்குழந்தையை கருக்கலைப்பு செய்வதற்கு பிரேசில் உச்சநீதிமன்றம் அனுமதியளித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
மூளையின்றி அல்லது மூளை சரியாக வளராமல் இருக்கும் கருவைக் கலைப்பதைச் சட்டப்படி அங்கீகரித்திருப்பது, மூளை இறந்து விட்டதாகச் சொல்லப்படும் தவறான கணிப்பு, இது தன்னைப் பாதுகாக்க இயலாத மனித உயிரைத் தூக்கி எறிவதாகும் என்றும் பிரேசில் ஆயர்கள் கூறினர்.
பிரேசில் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்குத் தங்களது ஆழ்ந்த கவலையை தெரிவித்து இவ்வியாழனன்று அறிக்கை வெளியிட்ட ஆயர்கள், எந்தவித விலக்கும் இன்றி அப்பாவி மனித உயிர்களைப் பறிப்பது அறநெறிப்படி ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் குறை கூறினர்.
இத்தகைய நிலையில் கருக்கலைப்பு செய்வதை, 80 விழுக்காட்டுக்கு மேற்பட்ட பிரேசில் மக்கள் ஆதரிக்கவில்லை என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.