ஏப்.14,2012 : ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் எழுபதாயிரம் குழந்தைகள் எய்ட்ஸ் நோயுடன் பிறந்திருப்பதாக
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்குனர் கூறியுள்ளார். இந்நோய் மேலும் பரவாமல் தடுக்க,
கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துலக நலவாழ்வு ஆர்வலர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.
நைஜீரியாவின் Ogun தென்மேற்கு மாநிலத்தைப் பார்வையிட்ட அந்நாட்டு அரசின் எய்ட்ஸ்
கட்டுப்பாட்டு அதிகாரி John Idoko இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். பிறந்துள்ள
எழுபதாயிரம் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலான தாய்மார்களுக்கு
எய்ட்ஸ் நோயுடன், மலேரியா, காசநோய் ஆகிய நோய்களின் பாதிப்பு இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.
இந்நோயைக் கட்டுப்படுத்த மாநில நடவடிக்கை குழு முழு முயற்சி எடுக்க வேண்டும். தாயிடம்
இருந்து குழந்தைக்கு பரவும் இந்த எய்ட்சைக் கட்டுப்படுத்த முடியுமா என்பது குறித்து முழு
அளவில் ஆய்வு செய்து வருகிறோம் என்று Idoko கூறினார். நைஜீரியாவில் எய்ட்சை ஒழிக்க
25 கோடியே 50 இலடசம் டாலரை நிதியாக உலக வங்கி வழங்கியுள்ளது. உலக நலவாழ்வு நிறுவனத்தின்
கணக்கின்படி, இங்கு நகரப் பகுதிகளைவிட கிராமப் பகுதிகளில்தான் இந்த எய்ட்ஸ் அதிகம் பரவுவதாகவும்,
இதன் கொடூரத்தை புரிய வைக்க தீவிரப் பிரச்சாரம் துவங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.