ஏப்.14,2012 : கத்தோலிக்கர் தங்களது பிறரன்புச் சேவைகளால் நற்செய்தியை அறிவிக்க முடியும்
என்று "Cor Unum" என்ற திருப்பீடப் பிறரன்பு அவைத் தலைவர் கர்தினால் Robert Sarah கூறினார்.
“திருத்தந்தையும் ஐரோப்பிய தன்னார்வப் பணியாளர்களும்” என்ற தலைப்பில் புதிய புத்தகம்
ஒன்றை வெளியிட்டுப் பேசிய கர்தினால் சாரா, இயேசு நமக்குச் செய்ததையே நாம் செய்கிறோம்
என்று கூறினார். பிறரன்பு, நேரடி நற்செய்தி அறிவிப்புப் பணியாக இல்லாவிட்டாலும் அதுவும்
ஒருவகையான நற்செய்திப் பணியே என்றும் கூறினார் கர்தினால் சாரா. ஐரோப்பாவில் 2011ம்
ஆண்டு தன்னார்வப்பணியாளர் ஆண்டு கடைப்பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த நவம்பரில் வத்திக்கானில்
நடைபெற்ற கூட்டத்தின் முக்கிய நிகழ்வுகள் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.