வத்திக்கானில் திருப்பீட விவிலியக் ஆணைக்குழுவின் ஆண்டுக் கூட்டம்
ஏப்.13,2012. திருப்பீட விவிலியக் ஆணைக்குழுவின் ஆண்டுக் கூட்டம் இம்மாதம் 16 முதல் 20
வரை வத்திக்கானிலுள்ள Domus Santae Marthae இல்லத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பீட
விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத் தலைவர் கர்தினால் வில்லியம் ஜோசப் லெவாடா முன்னிலையில்,
இவ்விவிலியக் குழுவின் பொதுச் செயலர் இயேசு சபை அருள்தந்தை Klemens Stock தலைமையில்
இக்கூட்டம் நடைபெறும். “விவிலியத்தில் உள்தூண்டுதல் மற்றும் உண்மை” என்ற தலைப்பில்
இக்கூட்டம் நடைபெறும்.