ஏப்.12,2012. இயேசு சபை அருள்தந்தை அலெக்சிஸ் பிரேம் குமார் இயேசு சபை மதுரை மாநிலத்தைச்
சேர்ந்தவர். இவர் ஜே.ஆர்.எஸ் என்ற பன்னாட்டு இயேசு சபை புலம் பெயர்ந்தோர் அமைப்பில்,
தமிழகத்தில் இலங்கை புலம் பெயர்ந்தோர்க்கான பணிக்குழுவின் இயக்குனராக ஆறு ஆண்டுகளுக்கு
மேலாகப் பணி செய்தவர். தற்சமயம் ஆப்கானிஸ்தானில் Herat பகுதியில் இயேசு சபை புலம் பெயர்ந்தோர்
அமைப்பின் திட்ட இயக்குனராகப் பணி செய்து வருகின்றார் அருள்தந்தை பிரேம் குமார். இவரை
இன்று சந்திப்போம்.