2012-04-12 14:25:55

கவிதைக் கனவுகள்.... கொடுப்பதில் இன்பம்


பிச்சைப் பாத்திரம் ஏந்தி
வீடு வீடாய்ச் சென்றார்
உறவுகள் விரட்டிய முதியவர்.
மலர்ந்த முகங்கள் தந்த
சோறும் குளம்பும் காயும்
நொறுங்கிய நெஞ்சுக்கு ஆறுதலாய்
பசித்த வயிற்றுக்கு பஞ்சாமிர்தமாய்
வாழ்க வாழ்க என
வாழ்த்தியது முதியவர் மனது.
நாள்கள் நகர நகர
பிச்சைப் பாத்திரம் நிறைந்தது, ஆனால்
பிச்சை இட்ட முகங்களில்
மலர்ச்சி மறைந்தது மெல்ல மெல்ல
வயிறு நிரம்பியது மனது வாடியது
முதியவர் மனது சொன்னது.....
பிச்சைப் பாத்திரம் நிரம்ப வேண்டாம்
பிச்சை இடும் முகங்கள் மலர்ந்தால் போதும்
கைநிறைய சோறு வேண்டாம்
மனது நிறைந்த சோறு போதும்
கொடுப்பதில் இன்பம்
உள்ளம் உவந்து கொடுப்பதில் பேரின்பம்








All the contents on this site are copyrighted ©.