2012-04-12 15:26:47

ஒடிஸாவில் பிணைக் கைதியாக வைக்கப்பட்டிருந்த இத்தாலியர் விடுதலை


ஏப்ரல்,12,2012. ஒடிஸாவில் கடந்த 29 நாட்களாகப் பிணைக் கைதியாக வைக்கப்பட்டிருந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த Paolo Bosusco, மாவோயிஸ்ட்களால் இவ்வியாழனன்று விடுவிக்கப்பட்டார்.
இத்தாலியரான Bosuscoவின் விடுதலைக்காக முயற்சிகளை மேற்கொண்ட ஒடிஸா முதல் அமைச்சர் நவீன் பட்நாயக்கை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் S.M.கிருஷ்ணா பாராட்டியுள்ளார்.
மார்ச் மாதம் 14ம் தேதி ஒடிஸாவின் Ganjam பகுதியிலிருந்து Paolo Bosusco மற்றும் Claudia Colangelo என்ற இரு இத்தாலியர்கள் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்டனர். இவர்களில் 61 வயதான Colangelo, உடல்நிலை காரணமாக ஒரு சில நாட்களில் விடுவிக்கப்பட்டார்.
மாவோயிஸ்ட்கள் விதித்திருந்த ஒரு சில நிபந்தனைகளை ஒடிஸா அரசு நிறைவேற்றியதைத் தொடர்ந்து, இத்தாலியரான Bosuscoவும் இவ்வியாழனன்று விடுவிக்கப்பட்டார்.
எனினும், மாவோயிஸ்ட்களால் மார்ச் 24ம் தேதி கடத்திச் செல்லப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர் Jhina Hikaka இன்னும் விடுவிக்கப்படவில்லை.








All the contents on this site are copyrighted ©.