2012-04-11 16:31:04

கருத்தடை தொடர்பான நலகாப்பீட்டுத் திட்டத்திற்கு ஆதரவு தரும் முதலாளிகள் அக்குற்றத்திற்குத் துணைபோகின்றனர் - வத்திக்கான் அதிகாரி


ஏப்ரல்,11,2012. பணியாளர்களை நியமனம் செய்யும் முதலாளிகள், அவர்கள் சார்பில், கருத்தடை தொடர்பான நலகாப்பீட்டுத் தொகையை வழங்குவது அக்குற்றத்திற்கு துணைபோவதை ஒத்தது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
வத்திக்கான் சட்டம் மற்றும் நீதித் துறையில் பொறுப்பாளராக இருக்கும் கர்தினால் Raymond Burke, கத்தோலிக்கச் செயல்பாடு (Catholic Action) என்ற அமெரிக்கப் பொதுநிலையினர் கழகத்தின் தலைவர் Thomas McKennaவுக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
ஒபாமா தலைமையில் செயல்படும் அமெரிக்க அரசு எடுத்துள்ள தவறான முடிவுகளை அமெரிக்க ஆயர்கள் வன்மையாக எதிர்த்து வருவதைக் குறித்து தன் மகிழ்வையும், ஆதரவையும் தெரிவித்த கர்தினால் Burke, அமெரிக்க அரசு எடுத்துவரும் தவறான முயற்சிகளுக்குத் துணை போகும் முதலாளிகளும் கருத்தடை என்ற பாவத்திற்கு உடந்தையாகின்றனர் என்று சுட்டிக் காட்டினார்.
ஒபாமா அரசு வெளியிட்டு வரும் பல்வேறு தவறான படிப்பினைகளால் கத்தோலிக்கர்கள் பொய்யான வழிகளைப் பின்பற்றுவதற்குப் பதில் மனசாட்சிக்கும், கத்தோலிக்கப் படிப்பினைகளுக்கும் செவி மடுக்கவேண்டும் என்று கர்தினால் Burke வேண்டுகோள் விடுத்தார்.
கர்தினால் Burke அளித்துள்ள் இந்த பேட்டியானது இப்புதனன்று மாலை அமெரிக்காவில் ஒளிப்பரப்பபடுகிறது.








All the contents on this site are copyrighted ©.