ஏப்ரல் 11, 2012. – கவிதைக் கனவுகள்.............பாரதியின் வேண்டல்
தேடிச் சோறுநிதந் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவ மெய்தி கொடுங் கூற்றுக்
கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் அவைநேரே இன்றெனக்குத் தருவாய் என்றன் முன்னைத்
தீயவினைப் பயன்கள் இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும் இனி என்னைப் புதிய உயிராக்கி
எனக்கேதுங் கவலையறச் செய்து மதிதன்னை மிகத் தெளிவு செய்து என்றும்சந்தோஷங்
கொண்டிருக்கச் செய்வாய்!