2012-04-11 16:32:08

இறையடியார் Mascarenhasன் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் தொலைக்காட்சித் திரைப்படம் வெளியீடு


ஏப்ரல்,11,2012. இறையடியார் அருள்தந்தை Raymond Mascarenhas அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஒரு தொலைக்காட்சித் திரைப்படம் இத்திங்களன்று வெளியிடப்பட்டது.
மங்களூரு பகுதியில் இறையடியாராக உயர்த்தப்பட்டுள்ள முதல் மனிதர் என்ற புகழ்பெற்ற அருள்தந்தை Mascarenhasஐப் பற்றிய இத்திரைப்படத்தை மங்களூரு ஆயர் Aloysius Paul D’Souza வெளியிட்டார். இத்துடன் இறையடியார் Mascarenhas தொடர்பான ஓர் இணையதளத்தையும் ஆயர் Paul D’Souza துவக்கி வைத்தார்.
இறையடியார் Mascarenhas வாழ்வை விளக்கும் இத்திரைப்படத்தில் Kinnigoliயில் உள்ள சிறுமலர் பள்ளியில் பயிலும் 100 மாணவரும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரும் நடித்துள்ளனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.