2012-04-10 15:04:21

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தோர் 1,20,000 பேர் இந்தியாவில்


ஏப்ரல்,10,2012. போர் இடம்பெற்ற காலத்தில் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்தோராக சென்ற 1,20,000 பேர் தொடர்ந்து இந்தியாவில், முகாம்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கியிருப்பதாக அண்மை அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
வடக்கு, கிழக்கு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது இந்த புள்ளி விவரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
புலம்பெயர்ந்தோராகத் தங்கியிருக்கும் இந்த 1,20,000 பேரில் 23,000 பேர் மட்டும் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அவர்களும், நிரந்தரமான வீடுகள் அமைக்கப்பட்டால் மட்டுமே நாடு திரும்ப முடியும் என நிபந்தனை விதித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.