மும்பை மைதானத்தில் புனித வெள்ளித் திருவழிபாடுகள் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது
ஏப்ரல்,02,2012. மும்பையின் புரட்சி அரங்கமான August Kranti திறந்தவெளி அரங்கில் புனித
வெள்ளித் திருவழிபாடுகள் நடத்த அனுமதியளித்துள்ளார் மகராஷ்டிர முதலமைச்சர் Prithviraj
Chavan. கடந்த 55 ஆண்டுகளாகப் புனித வெள்ளித் திருவழிபாடுகளுக்கெனப் பயன்படுத்தப்பட்டு
வந்த மும்பையின் இந்த அரங்கு, இவ்வாரப் புனித வெள்ளித் திருவழிபாடுகள் நடைபெற அனுமதி
மறுக்கப்பட்டதையடுத்து, புனித ஸ்டீபன் ஆலயப் பங்குத்தந்தை Ernest Fernandes தலைமையிலான
குழு மாநில முதலமைச்சரைச் சந்தித்துப் பேசியது. இச்சந்திப்புக்குப் பின்னர் பேசிய
முதலமைச்சர் சவான், 55 ஆண்டுகளாக சமய வழிபாட்டுக்கு வழங்கப்பட்ட அனுமதியை இவ்வாண்டு மறுப்பது
அர்த்தமற்றது என்று தெரிவித்தார். மதக்கொண்டாட்டங்களுக்கென அரசு வளாகங்களை ஒதுக்கக்கூடாது
என்ற மும்பை நீதிமன்றத்தின் 2006ம் ஆண்டு ஆணையை மேற்கோள்காட்டி, மும்பை August Kranti
அரங்கத்தை இவ்வாண்டு புனித வெள்ளித் திருவழிபாடுகள் நடைபெற அனுமதி மறுத்திருந்தார் மகராஷ்டிரா
மாநில சுற்றுலா மற்றும் கலச்சாரத்துறை செயலர் ஆனந்த் குல்கர்னி.