'கருவில் வளரும் குழந்தைக்கு ஆசீர் வழங்கும் வழிமுறை'
ஏப்ரல்,04,2012. அமெரிக்க கத்தோலிக்கத் திருஅவை உருவாக்கியுள்ள 'கருவில் வளரும் குழந்தைக்கு
ஆசீர் வழங்கும் வழிமுறை' (Rite for the Blessing of a Child in the Womb) என்ற செபங்களுக்குத்
திருப்பீடத்தின் திருவழிபாட்டுத் திருப்பேராயம் ஒப்புதல் அளித்துள்ளது. கருவில் வளரும்
குழந்தையை எதிர்பார்த்திருக்கும் பெற்றோருடன் அவர்களைச் சுற்றியுள்ள பங்குச் சமுதாயமும்
அக்குழந்தையை எதிர்பார்க்கிறது என்பதை இச்செபங்கள் வெளிப்படுத்துகின்றன என்று அமெரிக்க
ஆயர்கள் பேரவையின் ஓர் அங்கமான உயிர்களைப் பேணும் நடவடிக்கைகள் என்ற குழுவின் தலைவர்
கர்தினால் Daniel DiNardo கூறினார். உலகின் பல இடங்களில் மேமாதம் அன்னையர் தினம் கொண்டாடப்படும்.
இவ்வாண்டு மேமாதம் 13ம் தேதி ஞாயிறன்று கொண்டாடப்பட உள்ள அன்னையர் தினத்தன்று ஆங்கிலத்திலும்
இஸ்பானிய மொழியிலும் வெளியிடப்படும் இந்தச் செபங்கள் அடங்கிய ஏடு அமெரிக்காவில் உள்ள
அனைத்து பங்குக் கோவில்களிலும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.