2012-03-30 14:42:26

பிலிப்பீன்சில் பூமி நேரம் கடைப்பிடிக்கப்படுவதற்கு ஆயர்கள் ஆதரவு


மார்ச்30,2012. மார்ச் 31ம் தேதியான இச்சனிக்கிழமை ஒரு மணி நேரத்திற்கு மின் விளக்குகளை அணைப்பதற்கு ஊக்குவிக்கும் “பூமி நேரத்தை” பிலிப்பீன்ஸ் மக்கள் கடைப்பிடிக்குமாறு அந்நாட்டு ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இச்சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை, அவசியமற்ற விளக்குகளை அணைக்கும் உலகினரோடு பிலிப்பீன்ஸ் நாட்டவரும் இணையுமாறு ஆயர்கள் கேட்டுள்ளனர்
மேலும், இந்தப் பூமி நேரத்தில், நமது பூமித்தாயைப் பராமரிப்பதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு ஆயர்கள் கேட்டுள்ளதாக, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் இளையோர் பணிக்குழு செயலர் அருள்திரு Conegundo Garganta கூறினார்.
2007ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் “பூமி நேரம்” முதன் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டது. அது தற்போது அனைத்துல நிகழ்வாக மாறியுள்ளது. 2012ம் ஆண்டு பூமி நேரம், மார்ச் 31ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.