இந்தியாவில் புற்றுநோய் உள்ள ஆண்களில் 40 விழுக்காட்டினருக்கு புகையிலைப் பயன்பாடு
இந்த நோயின் காரணம்
மார்ச்,29,2012. இந்தியாவில் 2010ம் ஆண்டு ஆறு இலட்சம் பேர் புற்று நோயினால் இறந்துள்ளனர்
என்றும், இந்நோய் ஏழைகள் செல்வந்தர் இருவரையும் பாதிக்கின்றது என்றும் அண்மையில் வெளியான
ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. Lancet என்ற நிறுவனம் நடத்திய இந்த ஆய்வு, புற்றுநோயைப்
பற்றி இதுவரை நடத்தப்பட்ட மற்ற ஆய்வுகளில் இருந்து வேறுபட்டிருந்தது என்று கூறப்படுகிறது. இதுவரை
மேற்கொள்ளப்பட்ட மற்ற ஆய்வுகள் நகர மக்களையே அதிகம் சார்ந்திருந்தது. தற்போதைய ஆய்வு
நகரங்களிலும், மிகவும் பின்தங்கிய கிராமங்களிலும் 10 இலட்சம் குடும்பங்களில் எடுக்கப்பட்டுள்ளது
என்று தெரிகிறது. ஆண்கள் மத்தியில் வயிறு மற்றும் நுரையீரல் புற்றுநோய் அதிகம் உள்ளதென்றும்,
பெண்கள் மத்தியில் மார்பகம் மற்றும் வயிற்றுப் பகுதியில் புற்றுநோய் அதிகம் உள்ளது என்றும்
இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புற்றுநோய்
உள்ளவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவும், மிசோராம் மாநிலத்தில் மிக அதிகமாகவும் காணப்படுவதாக
இவ்வறிக்கை தெரிவிக்கிறது. புற்றுநோய் உள்ள ஆண்களில் 40 விழுக்காட்டினருக்கு புகையிலைப்
பயன்பாடு இந்த நோயின் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.