கியூபாவில் புனித வெள்ளிக்கிழமை, தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட திருத்தந்தை வேண்டுகோள்
மார்ச்28,2012. திருத்தந்தையும் கியூப அரசுத்தலைவர் ரால் காஸ்ட்ரோவும் 40 நிமிடங்களு்ககு
மேலாக தனியே பேசிய சந்திப்பு குறித்து நிருபர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்த, திருப்பீடப்
பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி, கியூபத் திருஅவைக்கு மேலும் சுதந்திரம்
வழங்கப்படுவது, பொது மக்களின் நலவாழ்வு குறித்துப் பேசினர் என்றார். மேலும், புனித வெள்ளிக்கிழமை,
தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட வேண்டுமென்று திருத்தந்தை கேட்டுக் கொண்டதாகக் கூறினார்.
14 ஆண்டுகளுக்கு முன்னர் அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால், அரசுத்தலைவர் ஃபிடெல்
காஸ்ட்ரோவிடம் கிறிஸ்துமஸ் தினத்தைத் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட வேண்டுமென்று
கேட்டுக் கொண்டார். அதே ஆண்டில் அவ்வாறு அறிவிக்கப்பட்டது என்றும் அருள்தந்தை லொம்பார்தி
கூறினார்.