2012-03-27 14:55:57

சிரியாவின் Homs நகரிலிருந்து கிறிஸ்தவர்கள் பெருமெண்ணிக்கையில் வெளியேறி வருகின்றனர்


மார்ச்,27,2012. சிரியாவின் Homs நகரிலுள்ள கிறிஸ்தவர்களுள் பெரும்பான்மையினோர் அந்நகரைவிட்டு வெளியேறயுள்ளதாக அப்பகுதியில் பணிபுரியும் இயேசு சபையினர் அறிவிக்கின்றனர்.
அச்சுறுத்தல் மற்றும் மோதல் காரணமாகவே இவர்கள் வெளியேறுகிறார்களேயன்றி, இஸ்லாமிய தீவிரவாதிகளின் கட்டாயத்தால் அல்ல என்றனர் இயேசு சபையினர். அண்மை நாட்களில் ஏறத்தாழ 50,000 கிறிஸ்தவர்கள் Homs நகரிலிருந்து அண்மை கிராமங்களுக்கு குடிபெயர்ந்துள்ளதாகக் கூறும் செய்தி நிறுவனங்கள், Homs நகரின் 90 விழுக்காட்டு கிறிஸ்தவர்கள் ஏற்கனவே வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.
அச்சத்தின் காரணமாக இவ்வாறு குடிபெயரும் மக்களிடையே Aid to the Church in Need என்ற கத்தோலிக்க உதவி நிறுவனம் சேவையாற்றி வருகின்றது.
கத்தோலிக்க செய்தி நிறுவனமான Fidesன் கூற்றுப்படி, ஓராண்டிற்கு முன்வரை ஒரு இலட்சத்து அறுபதாயிரம் கிறிஸ்தவர்கள் வாழ்ந்த Homs நகரில் தற்போது ஆயிரம் கிறிஸ்தவர்களே உள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.