2012-03-27 14:56:24

. தமிழகத்தில் நகர்ப்புற வறுமையை ஒழிக்க ரூ.200 கோடியில் புதிய திட்டம்


மார்ச்,27,2012. திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, வீட்டுவசதி, அடிப்படை கட்டமைப்பு, அனைவருக்கும் கல்வி, சுகாதாரம், சமுதாய மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியதாக "தமிழக நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம்' என்ற புதிய திட்டம், வரும் நிதியாண்டில் துவக்கப்படும். என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தெருக்குழந்தைகள், வீடற்றவர்கள் ஆகியோருக்கான சிறப்பு இல்ல வசதிகள் செய்து தரப்படுவதுடன், தற்போதுள்ள பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து, பெண்கள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து, இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்காக, தமிழக அரசின் வரவு - செலவு திட்டத்தில், 200 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.